Friday, October 24, 2014

படித்ததில் பிடித்தது...! part 2

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல;
பிரச்சினைகளைக் கண்டு நீங்கள்
பயந்து விலகும்போது. - பாரதியார்
=========================
எவையெல்லாம் அழகாக இருக்கின்றனவோ
எவையெல்லாம் அர்த்தத்துடன் இருக்கின்றனவோ
எவையெல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருமோ
அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கட்டும்!
இன்றும் நாளையும் என்றும்.
=========================
இதை மெதுவாகப் படியுங்கள்:

LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?
நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரிஉணர்த்திவிடுகிறது!
=========================
மின்தடை ஏற்படும்போதுதான்
நமக்கு மெழுதுவர்த்தி ஞாபகம் வருகிறது.
அப்படித்தான் பிரச்சினைகளின் போது
ஒரு நண்பர், தீர்வு என்னும் விளக்கேந்தி வருகிறார்.
நான் உனக்கொரு மெழுகுவர்த்தியாக இருப்பேன்
என்ற நம்பிக்கை எனக்குண்டு.
=========================
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
=========================
ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்:

"இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம்
உன்னுடன் இருக்க வேண்டும்?"

நான் கண்ணீர் உகுத்தேன்.
என் கண்ணீர்த் துளி
ஒரு பெருங்கடலில் விழுந்தது.

நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்:

"இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை."
=========================
நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.
=========================
பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்.
=========================
2 சொட்டு போட்டா அது போலியோ.
4 சொட்டு போட்டா அது உஜாலா
2880 சொட்டு போட்டா அது குவாட்டர்
இதுதான் இன்னிக்கு மேட்டர்.
=========================
வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்.
=========================
ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது
=========================
நாம் அனைவரும் ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.
=========================
ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
=========================
ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி,
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்!
=========================
உங்கள் இதயத்தில் மகிழ்ச்சி
உங்கள் ஆன்மாவில் புத்துணர்வு
உங்கள் வாழ்வில் வெற்றி
உங்கள் முகத்தில் புன்னகை
உங்கள் இல்லத்தில் அன்பின் நறுமணம்
இவை அனைத்தும் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்!

படித்ததில் பிடித்தது...!

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர்.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
=========================
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.
=========================
நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால்,
ஒரு நல்ல நண்பனின் மவுனம்
இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.
=========================
நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது. - பில் கேட்ஸ்
=========================
சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும். இதுதான் வாழ்க்கை!
=========================
மேலாளர்: உன் தகுதி என்ன?
சர்தார்: நான் Ph.D
மேலாளர்: Ph.Dன்னா என்ன?
சர்தார்: Passed high school with Difficulty.
=========================
நானும் சரி ஒரு ரவுண்டுதானேன்னு இன்டர்வியூக்குப் போனேன்.
அங்கே 5பேரும்மா.
மாத்தி மாத்தி கேள்வி கேட்டாங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் பதில் சொன்னேன்.
திடீர்னு ஒருத்தன் HRக்கு போன் போட்டு
மச்சான் ஃபிரீயா இருந்தா வாடா.
ஒருத்தன் சிக்கியிருக்கான்னு சொன்னான்.

சரின்னு நானும் 4ஆவது மாடிக்குப் போனேன்.
அங்கே 8 பேரும்மா.
அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு கேள்வி கேட்டாங்க.
நானும் எவ்வளவு நேரம் பதில் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?
அதுல ஒருத்தன் சொன்னான்
இவன் எவ்வளவு கேள்வி கேட்டாலும் சமாளிக்கிறான்டா
இவன் ரொம்ப அறிவாளின்னு சொல்லிட்டாம்மா.
=========================
(தேர்வு அறையில்)

ஆசிரியர்: டேய் என்னடா... கையில் ஃபார்முலா எழுதியிருக்கே?
மாணவன்: எங்க கணக்கு வாத்தியார்தான் ஃபார்முலா எல்லாம் விரல் நுனியில்இருக்கணும்னு சொன்னார்.
=========================
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
=========================
அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு சொல்வதை மட்டும்கேளுங்கள்.

ஏன்னா அறிவு......

சரி விடு. இல்லாததைப் பத்திப் பேச வேண்டாம்.
=========================
ஒண்ணு + ஒண்ணு = ரெண்டு
நீதான் எனக்கு ஃபிரெண்டு.

ரெண்டு + ரெண்டு = நாலு
நீ ரொம்ப வாலு.

மூணு + மூணு = ஆறு
நீ இல்லாம போரு.

நாலு + நாலு = எட்டு
எஸ்எம்எஸ் அனுப்பலன்னா குட்டு.
=========================
நட்பு எனும் கலையானது,
ஒரு நல்ல இசைக் கருவியை வாசிப்பது போன்றது.
முதலில் விதிகளின்படி இந்தக் கருவியை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
பிறகு விதிகளை மறந்துவிட்டு இதயத்திலிருந்து வாசிக்க வேண்டும்.
=========================
கடவுள்,
நகைச்சுவையுடன் எழுதக்கூடிய ஒரு சிறந்த எழுத்தாளர்.
ஆனால் அவர், நகைச்சுவையுடன் நடிக்கத் தெரியாத
மோசமான நடிகர்கள் பலரைக் கொண்டு தன் நாடகத்தை நடத்துகிறார்.
=========================
30 மாநிலங்கள்
1618 மொழிகள்
6400 சாதிகள்
6 மதங்கள்
6 இனங்கள்
29 பெரிய பண்டிகைகள்
ஒரு நாடு!
இந்தியனாக இருப்பதற்காகப் பெருமைப்படுங்கள்!
=========================
உயிரின் சுவாசம் மூச்சு
கண்களின் சுவாசம் கனவு
இதயத்தின் சுவாசம் துடிப்பு
நாக்கின் சுவாசம் பேச்சு
என் நட்பின் சுவாசம் நீ
=========================
எனக்கு இட்லியைப் பிடிக்காது
தோசையைத்தான் பிடிக்கும்.
ஏன்னா, இட்லி கூட்டமா வேகும்.
தோசை சிங்கிளாத்தான் வேகும்.
கூல்...
=========================
உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.
=========================
வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!
=========================
எல்லாம் சில காலமே - ரமண மகரிஷி
=========================
கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.

கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!
=========================
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!

துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
=========================
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
=========================
வெற்றியை விரும்பும் நமக்குத் தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
=======

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.!

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்ள 33 குறிப்புகள்.     

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.


3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.    

:-)  

Monday, October 20, 2014

தமிழ் கருத்துத் துளிகள்

தமிழ் கருத்துத் துளிகள் -tamil nice sayings popular





புரிதலில் பிரிதலுக்கு இடமில்லை
புரிந்து கொள்ளும் வரையில் தான் ஒருவர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு.
நன்கு புரிதலுக்குப் பின் பிரிதலுக்கு இடமில்லை.

தாயின் குணம் சேயின் நலம்
மண்ணில் விதை விழுந்து விருட்சமாக தேவையான அடிப்படை  தேவைகளை போல், மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள் உண்டு.  ஆனால் முக்கியமானது மண்ணின் தன்மை. மண்ணின் குணங்களே  அதற்கு ஆதாரம். இதைப் போல் மனிதனின் எதிர்கால வாழ்வின்  சிறப்பிற்கு ஆதாரம் பெற்றெடுக்கும் தாயின் குணங்களும்,  சிறப்பியல்புகளுமே.

விண்ணின் குறை மனிதனுக்கு எதிர்வரும் சிறை
கண்ணின் இமையினைப் போலே விண்ணின் இமையாக இருப்பது  ஓசோன் படலம். கண்ணில் தூசி விழுகையில் அதை உடனே தடுக்க  இமையுள்ளதை போல் விண்ணில் துளை விழாமல் தடுப்பதே ஓசோன்  படலத்தின் பணி. விண்ணின் துளையை கண்ணின் இமை போல்  கருத்தில் கொண்டு, கவனமுடன் கையாளுவோம் சுற்றுப்புறத்தினை.

உழைப்பின் பெருமை செழிப்பில் தெரியும்
உழைப்பு கற்றுக்கொடுக்க உரிய பயிற்சியாளன் தான் தேவை என்பதில்லை; ஒற்றை எறும்பும் போதும். அது தன் உழைப்பினை உறுதிகொண்டு உணர்த்தி விடுகிறது.

சத்யா..

பழமொழிகள்...!

பழமொழிகள்:

"பணக்காரனாக ஆவதற்கு பணத்தைச் சேர்த்து வைக்க வேண்டியதில்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும். "    -ஸ்பெயின்.

"போலியான நண்பனாக இருப்பதைவிட, வெளிப்படையான எதிரியாக இருப்பது மேல்." -இங்கிலாந்து.

"தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு ஒரு சொட்டுத் தண்ணீருக்கு முன்னால்  ஓராயிரம் முத்துக்கள் மதிப்புள்ளது ஆகாது." -பாரசீகம்.

"செழிப்பானபண்ணையிலிருந்துகுதிரையைவாங்கு:ஏழை வீட்டிலிருந்து பெண்ணை எடு." -எஸ்டோனியா.                                                                                                                                  

"மனிதர்கள் நேசமாயுள்ள இடத்தில் தண்ணீர் கூட இனிப்பாய் இருக்கும்." - சீனா.

"நாய் குரைக்கிற போதெல்லாம் நீங்கள் தாமதித்தீர்களேயானால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லவே முடியாது." - அராபி.

"ஒருவன் ஆயிரம் மைல்கள் நடந்தாலும், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துத்தான் அத்தனை மைல்கள் நடக்க முடிந்ததென்பதை மறவாதீர்கள்." - சீனா.

"பக்தியோடு பிரார்த்தனை செய். ஆனால் சுத்தியலை பலமாய் அடி." -இங்கிலாந்து.

"உன் அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால்   உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே." -ஜெர்மன்.

"ஆசை பேராசையாகவும், அன்பு வெறியாகவும் மாறும் போது அமைதி விலகி எங்கோ போய்விடுகிறது." -ஜப்பான்.

தன்னம்பிக்கை கவிதை..!

தன்னம்பிக்கை கவிதை- self belive poems in tamil







தன்மேல் தனக்கிருக்கும்
ஆளுமையின் உச்சம்
தன்னம்பிக்கை!

தன்மானம் பிழைத்திடவே
தக்கவைக்கும் மிச்சம்
தன்னம்பிக்கை!

எல்லாமே தொலைத்தபின்னும்
எஞ்சியிருக்கும் சௌபாக்கியம்
தன்னம்பிக்கை!

ஜீவனே போனபின்னும்
உயிர்த்தெழும் வைராக்கியம்
தன்னம்பிக்கை!

அனுதாபப் பார்வைகளை
அறுத்தெறியும் கூர்வாள்
தன்னம்பிக்கை!

அனைத்துமிங்கு சாத்தியமே என
அறிவித்திடும் சுய அறிவால்....
தன்னம்பிக்கை!

விவேகானந்தரின் பொன் மொழிகள்

விவேகானந்தரின் பொன் மொழிகள்-most poplar vivekananda quotes tamil






"நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."

"பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

வெற்றிக்கான நான்கு தூண்கள்..!

வெற்றிக்கான நான்கு தூண்கள் -PATIENCE-POWER-PLAN-PERSEVERANCE

PERSEVERANCE


ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?
நான்கு.
வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.
என்னென்ன?
அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி….
ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்திற்குப் பிறகுதான் வருகின்றன என்பதை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது.
அதேபோல, வெற்றி நமக்கு வேண்டுமானால், நான்கு விஷயங்கள், முன்னதாக நமக்குத் தேவை.
என்னென்ன?
முதல் தேவை: பொறுமை
கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.

இரண்டாம் தேவை : சக்தி
பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே.
பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்?
அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.
ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)

மூன்றாம் தேவை : திட்டம்
வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan

நான்காம் தேவை : விடாமுயற்சி
திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற்சி, வெற்றியைத் தொடும்வரை, தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி, Preseverance.

இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்.
ஆக 4Ps என்று சொல்லப்படும்,
PATIENCE
POWER
PLAN
PERSEVERANCE
என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து சேர்ந்துவிடும்.


சத்யா...

Sunday, October 19, 2014

பொன்மொழிகள்....!

முயற்சி பொன்மொழிகள்


1. முயற்சி திருவினையாக்கும்!
- தமிழ்நாடு

2. ஓடிச் செல்பவனுக்கு அகப்படும்!
- இந்தியா

3. மற்றொருவன் மூக்கினால் ஒருவன் மூச்சுவிட முடியாது!
- தாய்லாந்து

4. முன்னால் தாவுவதற்குச் சிறிது
பின்னால் செல்ல வேண்டும்!
- பிரான்ஸ்

5. வாழ்வதன் பொருள் இடைவிடாது முயற்சி செய்தல்!
- ஜெர்மனி

6. முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பலில்லாத கடல் யாத்திரை போன்றது! - வேல்ஸ்

7. அடி மேல் அடி விழுந்தால் ஆப்புக்கட்டையும் இறங்கி விடும்!
- வேல்ஸ்

8. கடவுள் ஒருவனுக்குப் புதையலைக் காட்டினால், அவனேதான் அதைத் தோண்டி எடுக்க வேண்டும்!
- ùஸக்

9. நேரமும் ஓய்வும் இருந்தால் தவளையும் ஒரு மைல் துள்ளிச் செல்லும்! - செர்பியா

10. சோர்வடைந்த பின்னும் ஒருவன் நெடுந்தூரம் செல்ல முடியும்!

அன்பு..!

          அன்பு...! 


      மனிதனாக பிறந்த ஒவ்வொரு உயிரும் எதோ ஒரு தேடுதலில் தான் வாழ்க்கையை தொடங்குகிறது., அத்தேடுதல் எதுவென யூகித்து பாருங்கள்,, முதலில் ஒரு குழந்தை பிறந்தவுடன் தன் அன்னையின் அன்பையும்,, அரவணைப்பையும்,, பாதுகாப்பையுமே தேடுகிறது.. சிறு குழந்தை கூட தொடுதல் மூலம் தன் அன்னையாரென அறிவது எப்படி அன்புதான்..

தொட்டிலில் தொடங்கி கட்டையில் வேகும்வரை மனிதனுக்கு முதல் தேவை அன்புதான்… இதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.. வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியம் உணவு, உடை , இருப்பிடம்,, அதை தாண்டி மனிதன் மனிதனாக வாழவைப்பது அன்பு தான்,,,

அன்பு இந்த சொல்லை நாம் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்,,, தாயும் தந்தையும் காட்டுவதும் அன்புதான்,, சகோதரப் பாசமும் அன்புதான்,, உறவுகள் நட்புகள் காட்டுவதும் அன்புதான்,, காதலர்கள் இருவரிடத்திலும் இருப்பதும் அன்புதான்,,,கணவன் மனைவிக்குள் இருப்பதும் அன்புதான்,,, இப்படி அன்புபல பரிணாமங்களில் நம்மை சுழல வைக்கிறது..

உலகில் பிறந்த ஒரு ஒரு உயிரும் தன்னை தனக்காய் நேசிக்க ஒரு ஜீவன் வேண்டுமென நினைப்பது இயல்பு,, அது எவ்வித உறவுத்தேடலாகினும் அங்கே உணரப்படும் அன்பு என்பது அவனை இயங்க வைக்கும் ஒரு அழகான விசயம் தான்,,

அன்பு மட்டுமே உலகத்தை ஆழும் ஒரு அளப்பரிய சாதனம்,, அன்பு இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்தல் என்பது மிகக் கொடுமையானது,, ஒரு ஜீவன் கூட தன்னால் நேசிக்கப்படாமலோ அல்லது தன்னை நேசிக்காமலோ இருப்பது என்பது சாத்தியமே இல்லை…

அப்படி பட்ட அன்பு எப்படி பட்டதாக இருத்தல் வேண்டும் ? எப்படி பட்டதாக இருக்கிறது என்பதை ஒருமுறை அலசிப் பார்க்க விரும்புகிறேன்,,,

ஒரு தாய் காட்டும் அன்பை விட சிறப்பாய் யாரும் காட்டி விட முடியாது,, தாய் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு என்பது எதிர்பார்பில்லாதது,, தன் மகன் அல்லது மகள் எப்படி பட்டவர்களாக இருப்பினும் அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் தான் தாயின் அன்பு,,, தன் மகன் கொலைகாரனாகவே இருந்தாலும் கூட ஒரு தாய் அவனை வெறுத்துவிட மாட்டாள்,, தன் பிள்ளைகளின் வாழ்க்கையை மட்டுமே கருத்தில் கொண்டு தன் வாழ்நாளை அவர்களுக்காகவே கழிப்பவர் தான் தாய்,,, அந்த அன்பிற்க்கு ஈடு என்று எதுவுமே கிடையாது,,,

தகப்பன் காட்டும் அன்பு எனபது தன் மகனை (மகளை) சிறப்புடன் விளங்கச் செய்ய வேண்டுமென்ற அக்கரையில் இருக்கும்,,, கடிந்து கொள்ளும் தகப்பனுக்குள்ளும் கருணை மிகுந்த அன்பு காட்டப்பட்டும் காட்டப்படாமலும் இருக்கும்… தன் குழந்தைகளுக்காய் வாழ்நாள் முழுதும் உழைத்து மெழுகாய் தன்னை உருக்கும் அன்பு தான் தந்தையின் அன்பு…



சகோதரப் பாசம் என்பது ஒரு சில இடங்களில் மிகுந்தும் ஒரு சில இடங்களில் குறைந்தும் காணப்படுகிறது,,, பத்து வயது வரை தோழனாக இருப்பினும் பதினொன்றாம் வயதில் பங்காளியாகிப் போய்விடுகிறான்,, பங்காளி என்றால் இன்பம் துன்பம் சொத்து என அத்தனையும் பங்கு போட்டுக் கொள்பவன் தான் பங்காளி,, முதலில் தாயின் இரத்ததையும் தாய்பாலையும் பங்கிட்டுக் கொள்பவன் வளர்ந்து பெரியவன் ஆனதும் உடமைகளையும் உறவுகளையும் பங்கிட்டு கொள்கிறான்,, தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் எனபது சகோதர அன்பிற்கு சொல்லப்பட்ட ஒரு பழமொழியே… இது எல்லா விசயங்களிலும் எதிர்பார்த்தும் சில நேரங்களில் எதிர்பார்ப்பை நிறைவு செய்தும் தொடரும் ஒரு அன்பு…



உறவுகள் காட்டும் அன்பு எனபது அதிகபட்சம் வசதி வாய்பையும் குறைந்த பட்சம் உறவினை பேணுவதற்கும் காட்டப்படும் அன்பு ஆகும்… இங்கே சுயநலம் அதிகம்,, தனக்கு செய்தால் தானும் செய்வேன் எனவும்,, அவனுக்கு இன்று செய்தால் நாளை நமக்கு செய்வான் எனவும் எதிர்பார்த்தே காட்டப்படும் அன்பு ஆகும்…



நண்பர்கள் காட்டும் அன்பு என்பது மிகுந்த அக்கரையின் பாலும் தன்னை போல பிறரை நேசிக்கும் மனப்பான்மையாலுமே பெரும்பாலும் காட்டப்படுகிறது,,, அங்கே சிலர் சுயநலம் கருதி நட்பு பாவிப்போரும் உண்டு,, அது குறைந்த விழுக்காடே ஆகும்.. தன்னுடன் பிறவாத போதும் நண்பனுக்காய் இங்கே எவ்வளவோ செய்யும் நட்புகள் உண்டு,,, அதற்கு முதல் காரணம் புரிதல் மட்டுமே,,, நண்பனை புரிந்து கொள்ளுதல் போல தன் தாயை கூட ஒருவன் புரிந்து வைத்திருக்க மாட்டான்,, தன் நிழலைபோலவே உடன் வருவதுதான் உண்மையான நட்பு,, தாயின் அன்பிற்கு நிகரான அன்பு நட்பு மூலம் கிடைக்கும்,, அங்கே எதிர்பார்ப்புகள் இருக்காது,,, நல்ல நண்பனை பெற்றவன் ஒரு மிகுந்த பாக்கியவான் ஆவான்…



காதல் என்றால் அது ஒருவகையான அன்பு,,, அங்கே மிகுதியான அன்பு இருக்குமானால் அது இருவருக்கும் இருக்கும் போது மட்டுமே மிகுந்த நன்மை பயக்கும்,,, அங்கே ஒருவரை காட்டிலும் ஒருவருக்கு அதிக அன்பு இருக்குமாயின் இருவருக்குமே மிகப்பெரிய வலியைதரும்,,, காதல் என்பது ஒரு உடன்மைபாடு மனப்பான்மை என்றும் வைத்துக் கொள்ளலாம்,,, காதலிப்போர் தன்னை தவிர மற்றவர்களுடன் அவர்களின் அன்பையும்,, நேரத்தையும் செலவிட விரும்பமாட்டார்கள்,,...
சத்யா... 

காதலிக்கறவங்களுக்கு....

காதலிக்கறவங்களுக்கு சில அறிவுரை சொல்ல நான் விரும்பறேன்..


அய்யோ ஓடிடாதீங்க அறிவுரைனாலே பொதுவா யாருக்குமே பிடிக்காது அதுவும் காதலிக்கறவங்களுக்கு அறிவுரை சொன்னா சுத்தமா பிடிக்காது… ஆனாலும் பாருங்க சொல்லாம என்னால இருக்க முடியாது…

காதல்னா என்னானு முதல்ல நாம யோசிக்கலாம்… காதல் அப்படிங்கறது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நேசிக்கிறதுதான்,, அது சில சமயம் ஒரு ஆண்மேல இல்லாம பல ஆண்கள்மேலயும் வர்ரதுண்டு,, ஒரு பெண் மேல இல்லாம பல பெண்கள் மேலயும் வர்ரதுண்டு,,, அது காதாலானு நாம விவாதிக்க வேணாம் அதுவும் காதலாவே இருந்துட்டு போகட்டும் நமக்கு அது பிரச்சனை இல்லை…

பொதுவாவே ஆண், பெண் ஈர்ப்போடதான் படைக்கப்பட்டிருக்காங்க,, இங்கே இலைமறைவா காமம் கூட ஒழிஞ்சிருக்கும்,,, காதல்னா வெறும் மனசு சம்பந்தமான விசயம்னு சொல்றாங்க அப்ப அந்த காதல் கல்யாணத்துல முடியனும்னு ஏன் எதிர்பார்க்கறாங்க…. காதல் இருக்கிற இடத்துல நிச்சயம் காமமும் இருக்கும்…. இப்ப அது கூட பிரச்சனை இல்லை…..

நான் இன்னும் விசயத்துக்கு வரலைனு நீங்க கோவப்படறது எனக்கு நல்லா தெரியுது…

பாருங்க காதல் வந்திடுச்சினு வச்சிக்கோங்க காதலிக்கறவங்க உண்மையா நம்பனும் முதல்ல,, அவுங்க நல்லவங்களா கெட்டவங்களானு தெரிஞ்சுகிட்டு காதல் வராது,,, காதல் வந்த பின்ன எனக்கு அவன் பழக்கவழக்கம் பிடிக்கலை அவன் சரியில்லை (அல்லது அவள்) அப்படினு விலகப்படாது…

ஏன்னா காதலிக்க ஆரம்பிக்கும்போது என்னவும் யோசிங்க காதலிச்ச பின்னால அந்த யோசனைகளை தூக்கி குப்பையில போட்டுட்டு உங்களுக்கு ஏத்தவங்களா அன்பால திருத்தி கொண்டுவரப் பாருங்க….அப்புறம் கோவப்படறது சண்டபோடுறது இதெல்லாம் பெரிய விசயமா மனசுல வச்சிக்கிட்டு ஈகோ பாத்து பிரிஞ்சுடக்கூடாது,,,

கோபங்கறது எல்லார் மேலையும் நமக்கு வரும் அது ஒரு இயல்பான விசயம்,, நம்ம பெத்து வளர்த்த அம்மாமேலையே நாம கோவப்பட்டு சண்டபோடாம இருக்கமா? அப்பிடி இருக்கும்போது கோவம்வந்தா காதலை முறிச்சுக்கப்படாது…

மனிதனின் மனம் இயல்பாவே மரம் விட்டு மரம் தாவுர குரங்குபோலதான் ஒன்ன விட ஒன்னு எப்பவுமே உசத்தியாவேதான் தெரியும்,,,நாமதான் போதுங்கற மனப்பக்குவத்தை வளர்த்துக்கனும்…. தொட்டதுக்கெல்லாம் குறை சொல்றத நிருத்தனும்,,, அப்புறம் நாம எந்தநேரமும் அவுங்களையே நினைச்சுக்கிட்டு இருக்கிறதுபோல அவுங்களும் நம்பலையே நினைச்சுகிட்டு இருக்கனும்னு எதிர்பார்க்கப்படாது( அப்பிடி எதிர்பார்த்தா ஏமாத்தம் தான் மிஞ்சும்) அவன்(அவள்) எப்படி இருந்தாளும் எனக்குபிடிக்கும்னு நினைச்சுக்கோங்க பின்னாடி பிரச்சனை வராது…..

நான் நினைக்கிறபடிதான் அவன் (அவள்) நடக்கனும்னு நினைச்சா ரொம்ப தப்புங்க.. காதல் மட்டுமல்ல கணவன் மனைவியாவே இருந்தாளும் ஒரு ஒரு மனுசனுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கு அதுல நாம தலையவிட்டா அம்பேல் தான்.. யாரும் பொறுத்துக்க மாட்டாங்க…உதாரணத்துக்கு சுதந்திரம்னா நாம கைய கால எங்க வேணா ஆட்டலாம் நம்பலோடு கைகால்தான் ஆனா அது யார் கண்லையும் பட்டிரக்கூடாது அப்பிடி பட்டா கண்டீப்பா சண்டபோடலாம் தப்பில்லை….

அப்புறம் காதல் வந்தாச்சி காதலிக்கும் போது எல்லை தாண்டாம பாத்துக்கோங்க இது ரெண்டுபேருக்குமே ரொம்ப நல்லது… நிச்சயம் காதல்ல காமம் இருக்கும் ஆனா அந்த காமத்தை கட்டுப்படுத்தி உங்களை நீங்கதான் சரியா வச்சிக்கணும்…. முடிஞ்சவரை நாம காதலிக்கறவங்களை கல்யாணம் ஆகுர வரை தனியா சந்திக்காம இருக்கனும் தனியா சந்திச்சா நிச்சயம் எல்லை தாண்ட வாய்பாகிடும்.. பொது இடங்களில் சந்திக்கலாம் தப்பே இல்லை நீங்க எல்லை தாண்ட நினைச்சாலும் மவனே எவனாவது வந்து கலைச்சிவிட்டுப்போவான்….. அதானால் உசாரா இருந்துக்கோங்க காதலர்களே..



அப்புறம் காதலிச்சாச்சி ஒரு கட்டத்துல கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்தாச்சினு வச்சிக்கோங்க அப்பதான் பிரச்சனை ஆரம்பிக்கும்… வீட்டுல யுத்தம் நடக்கும்,, அவசரப்பட்டு ஓடிப்போயெல்லாம் கல்யாணம் பண்ணிக்கப்படாது அப்படி பண்னிக்கிட்ட கல்யாணம் பாதி தோத்துபோயி நிக்கிது… முடிஞ்சவரை பெத்தவங்களை சரிகட்ட பாருங்க ரொம்பவும் வீம்பு பண்னினா நிதானமா ஒருவேலையை தேடி நீங்க ரெண்டுபேரும் வாழுற அளவுக்கு பொருளாதரத்தை சரிகட்டிரவரை கமுக்கமா இருந்துக்கோங்க அப்புறம் கம்பி நீட்டுங்க….

வாழ்க்கை சுகமாக வாழ்றது உங்க கையிலதான் இருக்கு… இதுக்கு மேல நான் அறிவுரை சொன்னாலும் நீங்க கேக்க தயாரா இருக்க மாட்டீங்கனு புரியுது இது போதும் தானே…

என்னது யாரு ஓ நீங்க காதல் கல்யாணமானு கேக்குறீங்களா? இல்லப்பா நான் எப்பவும் ரொம்ப சமத்து பெத்தவங்க பாத்துவச்ச கல்யாணம் தான்.

சத்யா... 

வாழ்க்கை!

01. வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்



02. வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்



03. வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்



04. வாழ்க்கை ஒரு ஒரு சோகம் அதனை கடந்து வாருங்கள்



05. வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்



06. வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவேற்றுங்கள்



07. வாழ்க்கை ஒரு விளையாட்டு அதனை விளையாடுங்கள்



08. வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்



09. வாழ்க்கை ஒரு பாடல் அதனை பாடுங்கள்



10. வாழ்க்கை ஒரு  சந்தர்ப்பம் அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்



11. வாழ்க்கை ஒரு ஒரு பயணம் அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்



12. வாழ்க்கை ஒரு உறுதி மொழி அதனை நிறைவேற்றுங்கள்



13. வாழ்க்கை ஒரு காதல் அதனை ரசனையுடன் அனுபவியுங்கள்



14. வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்



15. வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்



16. வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்



17. வாழ்க்கை ஒரு குழப்பம் அதற்கு விடைக்காணுங்கள்



18. வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்  



19. வாழ்க்கை ஒரு உயரம் அதனை அடைந்து பாருங்கள்



20. வாழ்க்கை ஒரு இனிமை அதனை ரசித்து வாழ  பழகிக்கொள்ளுங்கள்



இறைவன் கூறிய வாழ்க்கை தத்துவத்தை பின்பற்றி வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு துணை வர வாழ்த்துகிறோம்.
நன்றி...

சத்யா...