Monday, October 20, 2014

தன்னம்பிக்கை கவிதை..!

தன்னம்பிக்கை கவிதை- self belive poems in tamil







தன்மேல் தனக்கிருக்கும்
ஆளுமையின் உச்சம்
தன்னம்பிக்கை!

தன்மானம் பிழைத்திடவே
தக்கவைக்கும் மிச்சம்
தன்னம்பிக்கை!

எல்லாமே தொலைத்தபின்னும்
எஞ்சியிருக்கும் சௌபாக்கியம்
தன்னம்பிக்கை!

ஜீவனே போனபின்னும்
உயிர்த்தெழும் வைராக்கியம்
தன்னம்பிக்கை!

அனுதாபப் பார்வைகளை
அறுத்தெறியும் கூர்வாள்
தன்னம்பிக்கை!

அனைத்துமிங்கு சாத்தியமே என
அறிவித்திடும் சுய அறிவால்....
தன்னம்பிக்கை!

No comments:

Post a Comment